போர்த்துகீசிய அதிகாரிகள், டயாம்பர் சினாட் மற்றும் கோவா விசாரணை போன்ற நடவடிக்கை கள் மூலம் கிறிஸ்தவத்தில் தலையிட்டனர். அவர்கள் செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவர்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதையும், ரோமன் கத்தோலிக்கத்துடன் மத இணக்கத்தை கடைபிடிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதில் வழிபாட்டு நடைமுறைகள், மொழி மற்றும் இந்த சமூகங்களின் தலைமையை மாற்றும் முயற்சிகளும் அடங்கும். போர்த்துகீசிய அதிகாரிகளின் தலையீடு குறித்து வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து, (நற்பெயர் பெற்ற போர்த்துகீசிய கவர்னர்கள் பற்றிய) ஒரு நவீன எழுத்தாளர் சேகரித்த சுவாரசிய தகவல்களில் சில:
16ம் நூற்றாண்டின் நடுப்பகுதி ‘கருணையின் கடுமை’ காலத்தில் நுழைகிறது. இது கிறிஸ்தவ இறையியலின் ‘நீதி’ மற்றும் ‘கருணை’ ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், அவற்றை சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. கிறிஸ்தவர்களாக மாற அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ‘கொள்கை மாற்றங்கள்’ நிழல்கள் போல இருட்டாகத் தொடங்கின.
16ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி, இந்தியாவில் கொள்கை மாற்றங்கள் மற்றும் சமூக அணுகுமுறை மாற்றங்களைப் பிரதிபலித்தது. ‘கருணையின் கடுமை’ என்பது ஒரு சகிப்புத் தன்மையற்ற கொள்கையாகும். ஜேசுயிட்கள்கூட 15ம் நூற்றாண்டைவிட 16ம் நூற்றாண்டில் இளைய உறுப்பினர்களிடம் சகிப்புத்தன்மை குறைவாயி ருந்தாக புகார் அளித்தனர்.
இந்து மதம் மற்றும் உருவ வழிபாடு பற்றிய கேள்விகளைக் கேட்டு மதத்தை வேறுபடுத்திப் பார்ப்பதை கிறிஸ்தவர்கள் செய்வில்லை. இந்து மதசின்னம், இந்து மதநம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு மேலாக, இனம் அல்லது பிராந்திய கலாச்சாரத்தினால் அவர்கள் மனம் புண்பட்டது. ஜேசுயிட் அடக்குமுறையை மக்கள் அதிகமாக உணர்ந்தார்கள். ஜேசுயிட்கள், தங்கள் பிரச்சாரத்தின் வீரியம், வைஸ்ராயின் பதவிக்காலம் வரை மட்டுமே நீடிக்கும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்கள். தங்களால் இயன்றவரை வைஸ்ராயை தக்கவைக்க விரும்பினார்கள்.
கி.பி.1560ல் காரம்போலிமில் ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மாறுவதைக் கண்டு ஊர்த் தலைவர்கள் ஒன்று திரண்டனர். மதம் மாறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மக்கள் தங்கள் சொந்த மதத்தின்படி ஒன்றாக வாழ்வதை பரிசீலிக்கவேண்டும் என் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, கோவாவில் போர்த்துகீசிய சட்டத்தின்படி, கிறிஸ்தவராய் மாறுவோருக்கு பலவித சலுகைகள் வழங்கி பரம்பரைச் சட்டங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டன.
கி.பி.1551ல் இந்தியாவுக்கு வந்து, பின்னர் ஜேசுயிட் சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, கி.பி.1561ல் போர்ச்சுகலுக்குத் திரும்பிய ஆண்டனி டி ஹெரேடியா, “நாங்கள் எங்கள் மதத்தை யார் மீதும் திணிக்கவில்லை. ஆனால் நடைமுறையில் ஜேசுயிட்கள்; கிறித்தவ மதத்தைப் பரப்புவது மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தது என்று குற்றம் சாட்டுகிறார். இது, ஜெசுவைட்டுகளின் மிகக்கடுமையான விமர்சகர்கள், ஜேசுயிட் ஆணையத்தின் உள்ளேயே இருந்ததையே குறிக்கிறது.
இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...